அர்ச்சகர்கள், பணியாளர்கள் திடீர் போராட்டம்


அர்ச்சகர்கள், பணியாளர்கள் திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 25 Aug 2023 12:30 AM IST (Updated: 25 Aug 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

குற்றாலம் கோவிலில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் திடீர் போராட்டம் நடத்தினர்.

தென்காசி

குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் நேற்று அர்ச்சகர்கள், பணியாளர்கள் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இந்த கோவிலில் தனிநபர் ஒருவர் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறார். இதனால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளோம். நேற்று காலையில் அந்த நபர் இங்குள்ள பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றவே பூஜையை நிறுத்தினோம். பின்னர் நாங்கள் கோவில் அலுவலகத்திற்கு சென்று அங்கு இருந்த அதிகாரியிடம் இதுகுறித்து கூறினோாம். ஆனால் உரிய பதில் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பி மீண்டும் பணியை தொடங்கியுள்ளோம் என்றனர். இதனால் சுமார் ½ மணி நேரம் பூஜைகள் பாதிக்கப்பட்டது.

1 More update

Next Story