நேரடியாக மக்களுக்கு நிதி வழங்கி வருவதாக பிரதமர் கூறுவது பொய் - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்


நேரடியாக மக்களுக்கு நிதி வழங்கி வருவதாக பிரதமர் கூறுவது பொய் - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்
x

நேரடியாக மக்களுக்கு நிதி வழங்கி வருவதாக பிரதமர் அப்பட்டமான பொய்யைக் கூறியுள்ளார் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,

மாநில அரசுக்குத் தராமல் நேரடியாக மக்களுக்கு நிதி வழங்கி வருவதாகத் தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் அப்பட்டமான பொய்யைக் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் எந்த மக்களுக்கு அவர் நிதியைக் கொடுத்தார்? பேரிடரில் பாதிக்கப்பட்ட 8 மாவட்ட மக்களுக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?

ஒரு ரூபாய் என்றாலும் அது உங்களிடம் முறையாக வந்து சேர வேண்டும் என நினைத்து நாங்கள் நலத்திட்டங்களைத் தீட்டுகிறோம். அதனை உறுதி செய்து செம்மைப்படுத்தத்தான் நீங்கள் நலமா திட்டம்.என தெரிவித்துள்ளார்.


Next Story