தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை


தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
x
தினத்தந்தி 5 Dec 2022 6:45 PM GMT (Updated: 5 Dec 2022 6:46 PM GMT)

தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

கோயம்புத்தூர்

பீளமேடு

நீலகிரி மாவட்டம் தேவாலா பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 27). கோவை காளப்பட்டி அருகே ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இதற்காக தனது மனைவியுடன், அங்கு வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார். ஆனந்துக்கு வலிப்பு நோய் இருந்ததால், அதற்கு சிகிச்சை எடுத்து வந்தார். ஆனாலும் குணமாகவில்லை என்று தெரிகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


Next Story