நாமக்கல்லில், நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்


நாமக்கல்லில், நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
x
தினத்தந்தி 19 July 2023 7:00 PM GMT (Updated: 20 July 2023 10:39 AM GMT)

நாமக்கல்லில், நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தனியார்துறை நிறுவனங்களும், தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாதந்தோறும் 3-வது வெள்ளிக்கிழமை நடைபெற்று வருகிறது.

இந்த மாதத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமானது நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே, தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை அவர்களது நிர்வாகிகளை கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்து கொள்ளலாம்.

இம்முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு மேலாளர், கணினி இயக்குபவர், விற்பனை பிரதிநிதி, ஏரியா மேனேஜர், டீம் லீடர், மேற்பார்வையாளர், கணக்காளர், காசாளர் போன்ற பணிகளுக்கு தேர்வு செய்ய உள்ளனர். இதில் அனைத்துவித கல்வித் தகுதி உள்ளோரும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

எனவே மேற்படி பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் அனைவரும் நாளை காலை 10.30 மணிக்கு நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story