போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு


போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
x
தினத்தந்தி 19 Jun 2023 5:07 PM GMT (Updated: 20 Jun 2023 7:24 AM GMT)

முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

திருப்பத்தூர்

இளைஞர் நலள், விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் தமிழக முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்போட்டிகள் கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது. இதில் வெற்றிப்பெற்று முதல் 3 இடங்களை பிடித்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி தனியார் மண்டபத்தில் நடந்தது.

கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். அ.நல்லதம்பி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், கந்திலி ஒன்றியக்குழு தலைவர் திருமதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


Next Story