கராத்தே போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு


கராத்தே போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு
x

கராத்தே போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு லழங்கப்பட்டது

மதுரை


மதுரை காமராஜ் பல்கலைக்கழக உள்விளையாட்டரங்கில் சோபுக்காய் கோஜூரியோ கராத்தே பள்ளியின் சார்பில் கராத்தே போட்டி நடந்தது. போட்டியில் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பங்கேற்றனர். பள்ளியின் இந்திய தலைமை பயிற்சியாளர் ரெண்சி சுரேஷ்குமார் தலைமை நடுவராக செயல்பட்டார். மதுரை காமராஜ் பல்கலைக்கழக உடற்கல்வியியல் துணை தலைவர் டாக்டர் ரமேஷ், உடற்கல்வியியல் இயக்குனர் டாக்டர் மகேந்திரன் மற்றும் சிலம்ப கலையின் ஐ.நா. பிரதிநிதி டாக்டர் சந்திரமோகன் ஆகியோர் போட்டிகளை தொடங்கி வைத்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். கராத்தே பள்ளியின் பல்வேறு மாவட்ட செயலாளர்களான பாக்கியராஜ், செந்தில், பாரத், கார்த்திக், கார்த்திகேயன், அங்குவேல், பாலகாமராஜன், முத்துராஜா, தணிகை உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


Next Story