பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு வளைவை திறந்து வைத்தார் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு வளைவை திறந்து வைத்தார் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 19 Dec 2022 5:43 AM GMT (Updated: 19 Dec 2022 5:44 AM GMT)

பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாக கல்வெட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை,

திமுக முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா இன்று கொண்டாடப்படுகிறது.

இதனையொட்டி, சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் இல்லத்தில் சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு வைக்கப்பட்டிருந்து அன்பழகன் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதன்பின், நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலக வளாகத்தில் அன்பழகனின் நூற்றாண்டு வளைவு மற்றம் அன்பழகன் கல்வி வளாக கல்வெட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.




Next Story