தேன்கனிக்கோட்டையில் பூணூல் அணிவிப்பு நிகழ்ச்சி

தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை தேர்ப்பேட்டையில் உள்ள கோல்கொண்டா பிராமண சமிதியில் பிராமண சங்கம் சார்பில் 7 குழந்தைகளுக்கு சமஷ்டி உபநயனம் என்ற பூணூல் அணிவிப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு ஹோமங்கள் நடந்தன. வேத விற்பனர்கள் ஸ்ரீசானுதாசன், நரசிம்மன், லட்சுமிபதி, லட்சுமிகாந்தன் ஆகியோர் 7 குழந்தைகளுக்கு அவர்களின் தாய், தந்தை, உறவினர்கள், நண்பர்கள் ஆசியுடன் பூணூல் அணிவித்தனர். பின்னர் அவர்கள் பேட்டராய சாமி கோவிலுக்கு அழைத்து செல்லப்பட்டு சாமிக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து அனைவருக்கும் விருந்து உபசரிப்பு நடந்தது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





