தென்னிந்திய திருச்சபை தேர்தல் முடிவை வெளியிட தடை -ஐகோர்ட்டு உத்தரவு


தென்னிந்திய திருச்சபை தேர்தல் முடிவை வெளியிட தடை -ஐகோர்ட்டு உத்தரவு
x

தென்னிந்திய திருச்சபை தலைமை பேராயர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடத்தலாம். ஆனால், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது என்று தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தென்னிந்திய திருச்சபை என்பது பொதுமக்களுக்கு உதவி செய்யும் விதமாக உருவாக்கப்பட்டது. இந்த திருச்சபையின் தலைமை பேராயராக கேரளாவை சேர்ந்த தர்மராஜ் ரசாலம் பதவி வகித்து வருகிறார்.

தென்னிந்திய திருச்சபைக்கு பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் இலங்கையில் உள்ளன. தென்னிந்தியா மற்றும் இலங்கையில் உள்ள தேவாலயங்கள், 100 சதவீதம் அரசு உதவிபெறும் சுமார் 2 ஆயிரம் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றை நிர்வாகம் செய்வது இந்த திருச்சபைதான்.

தலைமை பேராயர் தர்மராஜ் ரசாலத்தின் மீது முறைகேடு உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் கேரளாவில் பதிவாகியுள்ளது. அமலாக்கத்துறையும் இவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.

வயது வரம்பு

இவருக்கு வருகிற ஜூன் மாதம் 67 வயது பூர்த்தியாகிறது. தலைமை பேராயர் பதவி காலமும் 67 வயது வரைதான். அதன்பின்னர் அவர் ஓய்வு பெறவேண்டும். அதைத்தொடர்ந்து அந்த பதவிக்கு தேர்தல் நடத்த வேண்டும்.

ஆனால், இவரை தொடர்ந்து இப்பதவியில் நீட்டிக்க வைப்பதற்காக, ஓய்வு வயதை 67-ல் இருந்து 70 ஆக உயர்த்தி, சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளனர்.எனவே, தலைமை பேராயர் வயது வரம்பை 70 ஆக உயர்த்தி நடைபெறும் தேர்தலுக்கும், துணைத்தலைமை பேராயர் உள்ளிட்ட பதவிகளுக்கு நடைபெறும் தேர்தலுக்கும் தடை விதிக்க வேண்டும். திருச்சபையை நிர்வகிக்கவும், அதில் உள்ள முறைகேடுகள் குறித்து விசாரிக் கவும் ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதியை நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

நிபந்தனை

இந்த மனு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல் தங்கசிவன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

தலைமை பேராயர் உள்ளிட்ட பதவிகளுக்கு ஜனவரி 13-ந் தேதி (நேற்று) நடைபெறும் தேர்தலுக்கு தடை விதிக்க விரும்பவில்லை.

அதேநேரம், கீழ்க்கண்ட நிபந்தனைகளுடன் தேர்தலை நடத்திக்கொள்ளலாம். தேர்தல் நடவடிக்கை அனைத்தையும் வீடியோ மற்றும் ஆடியோ பதிவு செய்து, அடுத்த முறை அவற்றை தாக்கல் செய்ய வேண்டும்.

வெளியிடக்கூடாது

சி.எஸ்.ஐ. விதிகளின்படி ஓட்டு சீட்டு முறைப்படி தேர்தலை நடத்தலாம். ஆனால், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது. தற்போதுள்ள நிர்வாகிகளே மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை பதவியில் தொடரலாம்.

இந்த வழக்குகளை வருகிற 30-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன். அப்போது எதிர்மனுதாரர்கள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.


Next Story