தர்மபுரியில்வேளாண்மை துறை அமைச்சு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


தர்மபுரியில்வேளாண்மை துறை அமைச்சு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Aug 2023 12:30 AM IST (Updated: 18 Aug 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தமிழ்நாடு வேளாண்மைதுறை அமைச்சு பணியாளர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரியில் உள்ள தோட்டக்கலை துறை துணை இயக்குனர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க மாவட்ட செயலாளர் ரேகா தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஜெயவேல், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் துணைத்தலைவர் பழனியம்மாள் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். தோட்டக்கலைத் துறையில் அமைச்சு பணியாளர்களின் பணியிட மாறுதலில் விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும். பணி நியமனங்களில் சீரான நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் அமைச்சு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story