தர்மபுரியில்கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


தர்மபுரியில்கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 Oct 2023 12:30 AM IST (Updated: 4 Oct 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் அசோகன் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற பணியாளர் சங்க பொருளாளர் ஜெயராமன், செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். தமிழக அரசு அறிவித்த கடன் தள்ளுபடிக்கான தொகையை கூற்று வங்கிகளுக்கு உடனே வழங்க வேண்டும் .தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் நடத்தி வரும் 27 ஆயிரம் ரேஷன் கடைகளுக்கு உரிய செலவினங்களை தாமதமின்றி வழங்க வேண்டும். தேவையின்றி கிடங்குகளை கட்ட கட்டாயப்படுத்தக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் செயலாளர் நரசிம்மன், நிர்வாகிகள் ஸ்டாலின் மணிகுமார், துரைராஜ், உஷாராணி, செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story