தர்மபுரியில்அரசு ஊழியர்கள் காதில் பூ சுற்றி ஆர்ப்பாட்டம்


தர்மபுரியில்அரசு ஊழியர்கள் காதில் பூ சுற்றி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Oct 2023 7:00 PM GMT (Updated: 9 Oct 2023 7:01 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி மாவட்ட சி.பி.எஸ். (பழைய ஓய்வூதிய திட்டம்) ஒழிப்பு இயக்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவசக்தி தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் தமிழ்ச்செல்வி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காதில் பூ சுற்றி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து கோஷங்கள் எழுப்பினர். இதில் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சின்னராஜ், கருப்பண்ணன், சேரலாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story