குப்பைகளை எரிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் சிதம்பரத்தில் பரபரப்பு


குப்பைகளை எரிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் சிதம்பரத்தில் பரபரப்பு
x

சிதம்பரத்தில் குப்பைகளை எரிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

சிதம்பரம்,

சிதம்பரம் நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் ஓமகுளம் சிதம்பரம்-காட்டுமன்னார்கோவில் சாலையோரம் உள்ள கிடங்கில் கொட்டப்பட்டு எரிக்கப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், அப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை நகராட்சி ஊழியர்கள் ஓமகுளம் கிடங்கில் குப்பைகளை எரித்ததாக தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட ஓமகுளம் பகுதி மக்கள் குப்பைகளை எரிக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் சிதம்பரம் தாலுகா போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இதுபற்றி நகராட்சி அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதனை ஏற்ற பொதுமக்கள் மறியலை கைவிட்டு, கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சிதம்பரம்-காட்டுமன்னார்கோவில் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.


Next Story