பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கல்


பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கல்
x

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.

அரியலூர்

அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். நகராட்சி தலைவர் சாந்தி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் சரவணன் வரவேற்று பேசினார். சின்னப்பா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கி பேசினார். அவர் பேசுகையில், அரியலூர் மாவட்டத்தில் 64 மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.2 கோடியே 79 லட்சம் மதிப்பிலான மொத்தம் 5,778 விலையில்லா சைக்கிள்களை வழங்க அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு விரைவாக வந்து, பாடங்களை கவனத்துடன் படித்து வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை அடைய வேண்டும், என்றார்.

1 More update

Next Story