குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்த இருசக்கர வாகனங்கள் பொது ஏலம்


குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்த இருசக்கர வாகனங்கள் பொது ஏலம்
x

பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்த இருசக்கர வாகனங்கள் பொது ஏலம் தண்ணீர்பந்தலில் நாளை நடக்கிறது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடைமையாக்கப்பட்ட 15 இரு சக்கர வாகனங்கள் நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் தண்ணீர்பந்தலில் உள்ள மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வைத்து பொது ஏலம் விடப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு அலுவலகத்தை நேரிலோ அல்லது 7904136038 என்ற செல்போன் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் இருசக்கர வாகனத்திற்கு ரூ.5 ஆயிரம் மதிப்புத்தொகை செலுத்தி தங்களது பெயர் முகவரியை ஆதார் அட்டை நகலோடு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஏலம் விடப்படவுள்ள இருசக்கர வாகனங்களை இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் பார்வையிடலாம். ஏலத்தில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்களது ஆதார் அடையாள அட்டையை தவறாமல் கொண்டு வர வேண்டும், என்று மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேலுமணி தெரிவித்துள்ளார்.


Next Story