பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம்


பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம்
x

திருவாரூர் மாவட்ட பகுதிகளில் பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம் வருகிற 10-ந் தேதி நடக்கிறது.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில், பொது வினியோக திட்டத்தினை மேம்படுத்திடும் வகையில் சிறப்பு பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் வருகிற 10-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை திருவாரூர் தாலுகாவிற்கு உட்பட்ட குளிக்கரை கிராமத்தில் திருவாரூர் உதவி கலெக்டர் தலைமையிலும், நன்னிலம் தாலுகா அன்னதானபுரம் கிராமத்தில் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை துணைப்பதிவாளர் தலைமையிலும் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.

குடவாசல் தாலுகா கண்டிரமாணிக்கம் கிராமத்தில் திருவாரூர் சரக துணை பதிவாளர் தலைமையிலும், வலங்கைமான் தாலுகா பூந்தோட்டம் கிராமத்தில மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலும் குறை தீர்க்கும் முகாம் நடக்கிறது.

நீடாமங்கலம்

நீடாமங்கலம் தாலுகா மூவர்கோட்டை கிராமத்தில் கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் தலைமையிலும், மன்னார்குடி தாலுகா நெடுவாக்கோட்டை கிராமத்தில் மன்னார்குடி உதவி கலெக்டர் தலைமையிலும் குறை தீர்க்கும் முகாம் நடக்கின்றன. திருத்துறைப்பூண்டி தாலுகா கீராளத்தூர் கிராமத்தில மன்னார்குடி சரக துணைப் பதிவாளர் தலைமையிலும், கூத்தாநல்லூர் தாலுகா அத்திச்சோழமங்கலம் கிராமத்தில் நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் தலைமையிலும் அந்தந்த கிராம நிர்வாக அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.

மேற்கண்ட இடங்களில் நடைபெறும் பொதுவினியோக திட்ட குறைதீர்க்கும் கூட்டங்களில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், புதிய மற்றும் நகல் குடும்ப அட்டை கோருதல் மற்றும் செல்போன் எண் மாற்றம் குறித்து மனு அளித்து பயன்பெறலாம். அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களையும் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story