திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் 193 மனுக்கள் பெறப்பட்டன


திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் 193 மனுக்கள் பெறப்பட்டன
x
தினத்தந்தி 23 Jan 2023 7:15 PM GMT (Updated: 23 Jan 2023 7:16 PM GMT)

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் 193 மனுக்கள் பெறப்பட்டன.

திருவாரூர்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 193 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் கொடுத்தனர். பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட அவர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் நடவடிக்கை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டார். அதே போல் மாற்றுத் திறனாளிகளிடமும் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் புவனா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story