குடிநீர் வசதி கோரி பொதுமக்கள் மறியல்


குடிநீர் வசதி கோரி பொதுமக்கள் மறியல்
x

குடிநீர் வசதி கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை நகராட்சி 32-வது வார்டுக்குட்பட்ட காந்திநகர் பகுதியில் குடிநீர் வினியோகம் சரியாக இல்லை எனக்கூறப்படுகிறது. இது தொடா்பாக மக்கள் பிரதிநிகள், அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை எனக்கோரி அப்பகுதி பொதுமக்கள் நேற்று முன்தினம் திருக்கட்டளை சாலையில் கட்டைகளை போட்டு மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நகராட்சி அதிகாரிகள் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். மேலும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். அதன்பின் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

1 More update

Next Story