மண்எண்ணெய் வழங்காததால் பொதுமக்கள் சாலை மறியல்


மண்எண்ணெய் வழங்காததால் பொதுமக்கள் சாலை மறியல்
x

மண்எண்ணெய் வழங்காததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருச்சி

மணப்பாறை:

மணப்பாறையில் உள்ள கோவில்பட்டி சாலையில் மண்எண்ணெய் விற்பனை நிலையம் ஒன்று உள்ளது. இங்கு நேற்று மண்எண்ணெய் வழங்கப்படுவதாக கூறப்பட்டதை அறிந்து ரேஷன் அட்டைதாரர்கள் மண்எண்ணெய் வாங்கச் சென்றனர். அப்போது, சிலிண்டர் இல்லாதவர்களுக்கு தான் மண்எண்ணெய் ஊற்றப்படும் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் அங்கிருந்த மக்கள் எந்தவித முன்னறிவிப்புமின்றி மண்எண்ணெய் வழங்குவதை எப்படி நிறுத்தலாம் என்று கேட்டு, விற்பனை நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையறிந்த வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் போலீசார், அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். அதன் பின்னர் யாருக்கும் மண்எண்ணெய் வழங்கப்படவில்லை.


Next Story