முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் 29-ந் தேதிஆஜராக புதுக்கோட்டை கோர்ட்டு உத்தரவு


முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் 29-ந் தேதிஆஜராக புதுக்கோட்டை கோர்ட்டு உத்தரவு
x

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் 29-ந் தேதி ஆஜராக புதுக்கோட்டை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை

முன்னாள் அமைச்சர்

அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. வருமானத்திற்கு அதிகமாக ரூ.35 கோடியே 79 லட்சத்து 90 ஆயிரத்து 81 மதிப்பில் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ந் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் அவரது மனைவி ரம்யாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் உள்ள அவரது வீடு, கல் குவாரிகள், நிறுவனங்கள், சென்னையில் உள்ள அவரது வீடு உள்பட மொத்தம் 56 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

29-ந் தேதி ஆஜராக உத்தரவு

இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது மொத்தம் 210 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை புதுக்கோட்டை கோர்ட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த மே மாதம் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 5-ந் தேதி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராகி இருந்தார். இந்நிலையில், வருகிற 29-ந் தேதி ஆஜராக கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. அப்போது அவரது மனைவி ரம்யாவையும் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.


Next Story