பூலித்தேவரின் புகழ் என்றும் தமிழ் நிலத்தில் நிலைத்து நிற்கும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்


பூலித்தேவரின் புகழ் என்றும் தமிழ் நிலத்தில் நிலைத்து நிற்கும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்
x

பூலித்தேவரின் புகழ் என்றும் தமிழ் நிலத்தில் நிலைத்து நிற்கும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

விடுதலைப் போராட்டத்துக்கான உணர்வைக் கிளர்ந்தெழச் செய்த மாவீரர் பூலித்தேவரின் புகழ் என்றும் தமிழ் நிலத்தில் நிலைத்து நிற்கும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக இந்திய நிலப்பரப்பில் முதன் முதலில் போர்முரசம் கொட்டி, விடுதலைப் போராட்டத்துக்கான உணர்வைக் கிளர்ந்தெழச் செய்த மாவீரர் பூலித்தேவரின் 308-ஆவது பிறந்தநாள்!

அடக்க நினைத்தால் தமிழர் பொறுக்க மாட்டார், அந்நியர் ஆதிக்கத்தை அடித்து நொறுக்குவர் எனக் காட்டிய அவரது புகழ் என்றும் தமிழ் நிலத்தில் நிலைத்து நிற்கும்!" என்று தெரிவித்து உள்ளார்.


Next Story