மதுரை மேலூரில் புரவி எடுப்பு திருவிழா


மதுரை மேலூரில் புரவி எடுப்பு திருவிழா
x

மதுரை மேலூரில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது

மதுரை

மேலூர்

மேலூரில் பஸ் நிலையம் அருகில் நடுவி நாட்டில் உள்ள காஞ்சிவனம் கோவிலில் புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது. இதையொட்டி 18 பட்டி கிராம அம்பலகாரர்கள், இளங்கச்சிகள், கிராம மக்கள் காஞ்சிவனம் கோவிலில் ஒன்றுகூடி பாரம்பரிய வழக்கப்படி புரவி எடுப்பு திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதைதொடர்ந்து மேலூரில் உள்ள தெற்குப்பட்டியில் புரவிகள் அமைக்கப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தெற்குப்பட்டியில் இருந்து மாலைகள் மரியாதைகளுடன் புரவிகளை 18 பட்டி கிராம மக்கள் ஊர்வலமாக காஞ்சிவனம் கோவிலுக்கு எடுத்து வந்தனர். பல ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் இந்த விழாவில் மேலூர் மற்றும் சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.


Next Story