அம்மா உணவகத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்


அம்மா உணவகத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்
x
தினத்தந்தி 3 Nov 2022 6:45 PM GMT (Updated: 3 Nov 2022 6:46 PM GMT)

தென்காசி அம்மா உணவகத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது

தென்காசி

தென்காசி நகராட்சி நிர்வாகம் சார்பில் புதிய பஸ் நிலைய வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை நகராட்சி தலைவர் சாதிர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகராட்சி துணைத் தலைவர் சுப்பையா, ஆணையாளர் பாரிசான், என்ஜினீயர் கண்ணன், கவுன்சிலர் வசந்தி, ம.தி.மு.க. நகர செயலாளர் வெங்கடேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



Next Story