மாநில அளவிலான போட்டியில் தகுதி


மாநில அளவிலான போட்டியில் தகுதி
x

மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவிலான போட்டியில் தகுதி பெறுவார்கள்.

பெரம்பலூர்

முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான தனிநபர் போட்டிகளில் முதல் இடம் பெறுபவர்களும், குழு போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்-வீராங்கனைகளும் மாநில அளவிலான போட்டிகளில் அரசு செலவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். எனவே, மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்பவர்கள், அனைவரும் மேற்காணும் விபரப்படி போட்டிகள் நடைபெறும் நாட்களில் போட்டிகள் நடைபெறும் இடங்களில் காலை 7 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும். மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 7401703516 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story