எடப்பாடி பழனிசாமி கடிதத்தை நிராகரிக்க கோரி மக்களவை சபாநாயகருக்கு ரவீந்திரநாத் எம்.பி. கடிதம்


எடப்பாடி பழனிசாமி கடிதத்தை நிராகரிக்க கோரி மக்களவை சபாநாயகருக்கு ரவீந்திரநாத் எம்.பி. கடிதம்
x
தினத்தந்தி 22 July 2022 10:17 AM GMT (Updated: 22 July 2022 10:22 AM GMT)

எடப்பாடி பழனிசாமி கடிதத்தை நிராகரிக்க கோரி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ரவீந்திரநாத் எம்.பி. கடிதம் அனுப்பியுள்ளார்

சென்னை,

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம், வைத்திய லிங்கம், மனோஜ்பாண்டியன், ஜெ.சி.டி. பிரபாகர் ஆகியோர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டனர். அதன் பிறகு ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் தொடர்ந்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன்கள் ரவீந்திரநாத் எம்.பி., ஜெயபிரதீப் ஆகியோரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வத்தின் சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை எடப்பாடி பழனிசாமி அதிரடியாக பறித்தார். அவருக்கு பதிலாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரை சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவராக தேர்வு செய்து அறிவித்தார்.

பாராளுமன்ற அ.தி.மு.க. உறுப்பினர் என்ற அந்தஸ்துடன் இருக்கும் ரவீந்திரநாத் குமாரின் அந்தஸ்தை குறைக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளார். அவர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டு இருக்கும் தகவலை பாராளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு கடிதம் மூலம் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதால் ரவீந்திரநாத் அ.தி.மு.க எம்பி.யாக ஏற்றுக்கொள்ள கூடாது என கூறி உள்ளார்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி கடிதத்தை நிராகரிக்க கோரி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ரவீந்திரநாத் எம்.பி. கடிதம் அனுப்பியுள்ளார்.அதில் எடப்பாடி பழனிசாமி தன்னை கட்சியிலிருந்து நீக்கியதற்கு எந்த ஒரு முகாந்திரமும் இல்லை பழனிச்சாமி பொதுக்குழுவிற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.


Next Story