பாம்பன் பாலத்தில் ரெயில் போக்குவரத்து டிசம்பர் 31 ஆம் தேதி வரை நிறுத்தம்: தெற்கு ரெயில்வே


பாம்பன் பாலத்தில் ரெயில் போக்குவரத்து டிசம்பர் 31 ஆம் தேதி வரை நிறுத்தம்: தெற்கு ரெயில்வே
x

கோப்புப்படம்

பராமரிப்புப் பணிகள் காரணமாக, பாம்பன் பாலத்தில் ரெயில் போக்குவரத்து டிசம்பர் 31ஆம் தேதி வரை நிறுத்தப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

பராமரிப்புப் பணிகள் காரணமாக, பாம்பன் பாலத்தில் ரெயில் போக்குவரத்து வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை நிறுத்தப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

முன்னதாக ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே அமைந்துள்ள ரெயில் பாலத்தின் மையப்பகுதியில் உள்ள தூக்குப்பாலத்தில் கடந்த 23-ந் தேதி இரவில் ரெயில் செல்லும்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக ராமேசுவரம் வரும் அனைத்து ரெயில்களும் மண்டபம் வரை இயக்கப்படுகின்றன.

அங்கு பராமரிப்புப் பணிகள் நடைபெற்ற நிலையில், நேற்று காலி பெட்டிகளை இயக்கி ரெயில்வே பொறியாளர்கள் மற்றும் ஐஐடி பொறியாளர்கள் ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து, டிசம்பர் 31ஆம் தேதி வரை பராமரிப்புப் பணிகள் காரணமாக பாம்பன் பாலத்தில் ரெயில் சேவைகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை, மதுரையில் இருந்து ராமேசுவரம் செல்லும் ரெயில்கள் மண்டபம் ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்பட்டு அங்கிருந்து இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story