ராமநாதபுரம்: உறியடிக்கும் நிகழ்வின் போது மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு


ராமநாதபுரம்: உறியடிக்கும் நிகழ்வின் போது மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு
x

மேலும் 4 சிறுவர்கள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மேலாய்க்குடி கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி உறியடி போட்டி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் உறியடிக்கும் நிகழ்வின் போது மின்சாரம் தாக்கி 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

உறியடிக்கும் நிகழ்வின் போது , பானை கட்டப்பட்ட கம்பி அருகில் இருந்த மின்சார கம்பத்தின் ஒயர்கள் மீது சாய்ந்ததில் மின்சாரம் தாக்கி 7 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். மேலும் 4 சிறுவர்கள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story