ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு - இலங்கை கடற்படை அட்டூழியம்


ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு - இலங்கை கடற்படை அட்டூழியம்
x

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்டனர்.

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் இருந்து நேற்று மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த நிலையில், கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தபோது இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களின் விசைப்படகுகளை கண்டதும் உடனடியாக அங்கிருந்து செல்லுமாறு எச்சரித்தனர். அதே நேரத்தில் விசைப்படகுகளை சுற்றி கற்களை வீசி தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதால் மீன்பிடி படகு சேதம் அடைந்துள்ளதாகவும், இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறிய செயல்களால் ராமேசுவரம் மீனவர்கள் மீன் பிடிக்க முடியாமல் பாதியிலேயே அவசர அவசரமாக கரை திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Next Story