ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மாதம் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் -ராமதாஸ்


ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மாதம் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் -ராமதாஸ்
x

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மாதம் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் தேங்காய்க்கு போதிய விலை கிடைப்பதில்லை என்பதால் தென்னை விவசாயிகளின் நலன்களை கருத்தில்கொண்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் வழங்கவேண்டும் என்று கோரி சுதந்திரதின நாளில் நடைபெற்ற கிராமசபை கூட்டங்களின் போது நூற்றுக்கணக்கான இடங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. தென்னை விவசாயிகளின் இந்த கோரிக்கை மிகவும் நியாயமானது.

தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் ரேஷன் கடைகள் மூலம் தேங்காய் எண்ணெய் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. 6 மாவட்டங்களில் மட்டும் இந்தத்திட்டத்தை செயல்படுத்துவதால் எதிர்பார்த்த பயன் கிடைக்காது.

ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் உள்ள 2 கோடிக்கும் கூடுதலான குடும்பங்களுக்கும் மாதத்திற்கு குறைந்தது ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் வழங்கப்பட்டால்தான் தென்னை விவசாயிகளுக்கு ஓரளவாவது பயன் கிடைக்கும். எனவே, மத்திய அரசுடன் தமிழக அரசும் இணைந்து, தமிழகத்திலுள்ள அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் மாதம் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் அவர் பதிவிட்டுள்ளார்.


Next Story