ரேஷன் அரிசி கடத்தியவர் கைது


ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
x
தினத்தந்தி 21 Jun 2023 7:00 PM GMT (Updated: 22 Jun 2023 11:20 AM GMT)

தென்காசி அருகே ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

தென்காசி

குடிமை பொருள் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா தலைமையில் போலீசார் தென்காசி ஊர்மேலழகியான் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மொபட்டில் 2 மூட்டைகளில் 100 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்ததாக மேலப்பாவூர் பால்பண்ணை தெருவை சேர்ந்த இருளப்பன் (வயது 60) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மொபட் மற்றும் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story