செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர் திறப்பு 500 கன அடியாக குறைப்பு


செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர் திறப்பு 500 கன அடியாக குறைப்பு
x

செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர் திறப்பு 500 கன அடியாக குறைக்கப்பட்டது.

குன்றத்தூர்,

தொடர்ந்து பெய்து வந்த கனமழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. ஏரியில் அதிகபட்சமாக 8 ஆயிரம் கன அடி வரை உபரி நீர் வெளியேற்றப்பட்டது. நேற்று செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்ட உயரம் 22.59 அடியாக இருந்தது. மொத்த கொள்ளளவு 3 ஆயிரத்து 271 மில்லியன் கன அடி, நீர் வரத்து 622 கன அடியும், நீர் வெளியேற்றம் 1000 கனஅடியில் இருந்து 500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் கண்காணிப்பு

மேலும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டத்தை தொடர்ந்து 22 அடியில் வைத்து கண்காணிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

தற்போது மேலும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதன் பேரிலும் வெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.


Next Story