செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்திறப்பு 1,000 கன அடியாக குறைப்பு


செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்திறப்பு 1,000 கன அடியாக குறைப்பு
x

செம்பரம்பாக்கம் ஏரிக்கு 1,000 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.

சென்னை,

மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்தது. கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து வினாடிக்கு 8,000 கனஅடி நீர் திறந்து விடப்பட்ட நிலையில், மழை நின்றதைத் தொடர்ந்து நீர்திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1,500 கன அடியில் இருந்து 1,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு 1,000 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. ஏரியின் நீர்மட்டம் 22.64 அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story