மாணவர்களுக்கு வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள்


மாணவர்களுக்கு வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள்
x

மாணவர்களுக்கு வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தன.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

மாணவர்களுக்கு வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தன.

ஜோலார்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் கடந்த வாரம் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு சிறு விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் மாணவர்களுக்கான வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் தொடக்க விழா பழைய ஜோலார்பேட்டை தொன்போஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. முதன்மை கல்வி அலுவலர் முனி சுப்புராயன் தலைமை தாங்கி போட்டிகளை தொடங்கி வைத்தார். முதன்மை கல்வி அலுவலக பள்ளி துணை ஆய்வாளர் தாமோதரன், அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஐ.ஆஜம் ஆகியோர் முன்னிலை வகித்தார். ஜோசப் ஏசுராஜ் வரவேற்றார்.

இதில் வட்டார அளவிலான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் கபடி, கைப்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியின் போது உடற்கல்வி ஆசிரியர்கள் அலெக்சாண்டர், மதன்குமார் உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உடற்கல்வி ஆசிரியர் ஏசுராஜ் நன்றி கூறினார்.


Next Story