பல்லடத்தில் படுகொலை செய்யப்பட்ட 4 பேரின் உடல்களையும் வாங்க உறவினர்கள் சம்மதம்


பல்லடத்தில் படுகொலை செய்யப்பட்ட 4 பேரின் உடல்களையும் வாங்க உறவினர்கள் சம்மதம்
x

பல்லடத்தில் படுகொலை செய்யப்பட்ட 4 பேரின் உடல்களையும் வாங்க உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர்,

பல்லடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கொலையாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், போலீசார் அளித்த உத்தரவாதத்தை ஏற்று 4 பேரின் உடல்களையும் பெற உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தையே உலுக்கிய இந்தக் கொடூர கொலை தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய குற்றவாளியை போலீசார் நெருங்கியுள்ளதாக கூறப்படுகிறது.


Next Story