உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி


உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு  நிவாரண உதவி
x

உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்

விருதுநகர்


சிவகாசி அருகே உள்ள ஊராம்பட்டி கிராமத்தில் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்கள் குமரேசன், சுந்தர்ராஜ், அய்யம்மாள், அச்சங்குளம் கிராமத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த அச்சங்குளத்தை சேர்ந்த செந்தில்குமார் ஆகியோரின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் அறிவித்தபடி நிவாரண உதவி தலா ரூ.3 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் வழங்கினார். மேலும் ஊராம்பட்டி பட்டாசு வெடிவிபத்தில் காயம் அடைந்த இருளாயி என்பவருக்கு ரூ. 50 ஆயிரத்திற்கான காசோலையையும் அமைச்சர் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story