கிருஷ்ணகிரி சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் - முதல் அமைச்சர் அறிவிப்பு


கிருஷ்ணகிரி சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் - முதல் அமைச்சர் அறிவிப்பு
x

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவியை முதல் அமைச்சர் அறிவித்துள்ளார்.

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ,

கிருஷ்ணகிரி மாவட்டம், காவிரிப்பட்டினம் அருகே இன்று காலை தருமபுரியில் இருந்து ஆந்திராவிற்கு சென்றுகொண்டிருந்த டிராக்டர் மீது எதிர்பாராத விதமாக தனியார் பேருந்து பின்புறம் மோதியதில் டிராக்டரில் பயணம் செய்துகொண்டிருந்த தருமபுரி மாவட்டம், சவுளூர், நூலஅல்லி கிராமத்தைச் சேர்ந்த திரு முனுசாமி த/பெ ஊமையன் (வயது 55), திருமதி மல்லி வயது 50), திருமதி வசந்தி க/பெ.சின்னசாமி (வயது 45) திரு.முத்து, தபெ.சின்னசாமி (வயது 22) மற்றும் வர்ஷினி, தபெ.சதீஷ் (3 மாத குழந்தை) ஆகியோர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், விபத்தில் கடும் காயமடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், விபத்தில் கடும் காயமடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்


Next Story