முதல்-அமைச்சருக்கு தபால் மூலம் கோரிக்கை


முதல்-அமைச்சருக்கு தபால் மூலம் கோரிக்கை
x
தினத்தந்தி 30 Sep 2023 7:00 PM GMT (Updated: 30 Sep 2023 7:01 PM GMT)

பொள்ளாச்சியில் முதல்-அமைச்சருக்கு தபால் மூலம் கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.

கோயம்புத்தூர்

சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை, பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். இறந்த சாலை பணியாளர்களின் வாரிசுகளுக்கு நெடுஞ்சாலைத்துறையிலேயே கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும்.

சாலை பணியாளர்களின் பணிக்கு மட்டும் தகுதி பெற்ற 200-க்கும் மேற்பட்டோர் கருணை அடிப்படையில் பணி வழங்க கேட்டு 15 ஆண்டுகளாக காத்திருப்போருக்கு சாலை பணியாளராக பணி நியமனம் வழங்க கோட்ட பொறியாளர் அனுமதித்து ஆணை வழங்க வேண்டும்.

சாலை பணியாளர்கள் அனைவரையும் தொழில்நுட்ப கல்வி பெறாத ஊழியர்கள் என அங்கீகரித்து ஊதிய மாற்றம், தர ஊதியம் வழங்க வேண்டும்.

மேலும் பணியாளர்களுக்கு 10 சதவீதம் ஆபத்துப்படி, சீருடை சாலைப்படி, நிரந்தர பயணப்படி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தினர் தமிழக முதல்-அமைச்சருக்கு பொள்ளாச்சி தலைமை தபால் நிலையத்தில் மனுவை தபாலில் அனுப்பினர். பொள்ளாச்சியில் முதல்-அமைச்சருக்கு தபால் மூலம் கோரிக்கை மனு அனுப்பப்பட்டதுஇதில் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story