மாயமான வாலிபர் குளத்தில் பிணமாக மீட்பு


மாயமான வாலிபர் குளத்தில் பிணமாக மீட்பு
x

மாயமான வாலிபர் குளத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.

புதுக்கோட்டை

ஆலங்குடி அருகே உள்ள மேல நெம்மகோட்டையை சேர்ந்தவர் சின்னத்துரை. இவருடைய மகன் மணிகண்டன் (வயது 22). இவர் கடந்த 5-ந் தேதி முதல் காணவில்லை என்று அவருடைய தந்தை ஆலங்குடி போலீசில் புகார் அளித்தார். இந்தநிலையில் கடந்த 16-ந் தேதி ஆலங்குடியில் உள்ள சாம்பிராணி குளத்தில் அழுகிய நிலையில் மணிகண்டன் பிணமாக கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பிரேத பரிேசாதனை முடிந்து அவரது உடலை பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். மேலும் மணிகண்டன் குளத்தில் மூழ்கி இறந்தாரா? அல்லது யாரேனும் அவரை கொலை செய்து இங்கு வீசி சென்றார்களா? என்று ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story