திருத்தணி அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த பசுமாடு மீட்பு


திருத்தணி  அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த பசுமாடு மீட்பு
x

கிணற்றுக்குள் தவறி விழுந்த பசுமாட்டை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

திருவள்ளூர்

திருத்தணி ஒன்றியம் சின்னகடம்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட பி.வி.எண்.கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் மணி (வயது 41). விவசாயியான இவர் பசுமாடு வளர்த்து வருகிறார். வழக்கம்போல் மணி மேய்ச்சலுக்கு பசுமாட்டை அழைத்து சென்றார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த உமாபதி என்பவருக்கு சொந்தமான 30 அடி ஆழமுள்ள பாழடைந்த கிணற்றுக்குள் பசுமாடு திடீரென தவறி விழுந்தது.

கிணற்றில் விழுந்த பசுமாடு சத்தமிடவே மாட்டின் உரிமையாளர் மணி கிணற்றில் சென்று பார்த்தார். அப்போது மாடு கிணற்றில் தவித்துக்கொண்ருந்ததைக் கண்டு அதிர்சியடைந்த அவர், உடனடியாக திருத்தணி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் அரசு தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றுக்குள் விழுந்து 2 மணி நேரம் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பசுமாட்டை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

1 More update

Next Story