ஓடையில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளி பிணமாக மீட்பு


ஓடையில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளி பிணமாக மீட்பு
x

ஓடையில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளி பிணமாக மீட்கப்பட்டார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட சேனாபதி கிராமத்தை சேர்ந்தவர் பாலையா (வயது 55), தொழிலாளி. இவர் கால்நடைகளுக்கு தீவனம் அறுப்பதற்காக வயலுக்கு சென்றுள்ளார். நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக அதிகளவில் தண்ணீர் சென்ற ஓடையில் இறங்கியபோது தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இந்தநிலையில் பாலையா வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் திருமானூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்தநிலையில், ஓடையில் உள்ள முட்புதரில் பாலையா பிணமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story