மாயமான முதியவர் கிணற்றில் பிணமாக மீட்பு


மாயமான முதியவர் கிணற்றில் பிணமாக மீட்பு
x

மாயமான முதியவர் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார்.

திருச்சி

முசிறி:

முசிறியை அடுத்த தண்டலைமேடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம்(வயது 62). மாட்டு தரகரான இவரை கடந்த 26-ந் தேதியன்று இரவு முதல் காணவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அப்பகுதியின் அருகே தரிசு காட்டில் உள்ள கிணற்றில் துர்நாற்றம் வீசுவதாக முசிறி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது தண்ணீர் இல்லாத அந்த கிணற்றில் ஒரு பிணமாக கிடந்தது தெரியவந்தது. இது பற்றி தகவல் அறிந்து தீயணைப்புத்துறை உயர் அதிகாரி கர்ணன் தலைமையில் வந்த தீயணைப்பு அதிகாரி ரங்கர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி பிணமாக கிடந்தவரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். இதில் கிணற்றில் இறந்து கிடந்தவர் சண்முகம் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி ஆகியோர் கைப்பற்றி முசிறி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story