நொய்யல் பகுதியில் தொடர் மின்தடையால் பொதுமக்கள் அவதி


நொய்யல் பகுதியில் தொடர் மின்தடையால் பொதுமக்கள் அவதி
x

நொய்யல் பகுதியில் தொடர் மின்தடையால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

கரூர்

புகழூர் துணை மின் நிலையத்தில் இருந்து முத்தனூர், சேமங்கி, முனிநாதபுரம், நடையனூர், சொட்டையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நொய்யல், மரவாபாளயம், குறுக்குச்சாலை, புன்னம் சத்திரம், புன்னம், வேட்டமங்கலம், குந்தாணிபாளையம், குளத்துப்பாளையம், சேமங்கி, முத்தனூர், நடையனூர், திருக்காடுதுறை, தவுட்டுப்பாளையம், நன்செய் புகழூர், பாலத்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை பலத்த மழை பெய்தது.

அப்போது அதிக காற்றின் காரணமாக நேற்று முன்தினம் மாலை சுமார் 6 மணியில் இருந்து நேற்று மதியம் 12 மணி வரை சுமார் 18 மணி நேரம் மின்வினியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் கடைக்காரர்கள் வியாபாரம் செய்ய முடியாமலும், குடியிருப்பு வாசிகள் இரவு தூங்க முடியாமலும் அவதி அடைந்தனர்.


Next Story