என்எல்சிக்கு எதிராக தீர்மானம் - ஊராட்சி செயலர்கள் மாற்றம்

கிராம சபை கூட்டத்தில் என்எல்சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய கிராம ஊராட்சியின் செயலாளர்கள் மாற்றப்பட்டு உள்ளனர்.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் என்எல்சிக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக 5 கிராமங்களில் மே 1ஆம் தேதி கிராம சபை கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதாவது, கடலூர் மாவட்டம் கத்தாழை, சின்ன நற்குணம், மேல் வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, நெல்லி கொள்ளை ஆகிய 5 கிராமங்களில் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், தீர்மானம் நிறைவேற்றப்பட்ட கிராம ஊராட்சி செயலாளர்கள் மாற்றம் செய்து புவனகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





