போலீசாரின் சிறப்பு விசாரணை முகாமில் 9 மனுக்களுக்கு தீர்வு


போலீசாரின் சிறப்பு விசாரணை முகாமில் 9 மனுக்களுக்கு தீர்வு
x

போலீசாரின் சிறப்பு விசாரணை முகாமில் 9 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமையில் நடந்தது. முகாமில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவின் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கவேல் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர். இதில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மொத்தம் 30 மனுக்களில், 9 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


Next Story