ஓய்வுபெற்ற மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ஓய்வுபெற்ற மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Aug 2022 7:00 PM GMT (Updated: 23 Aug 2022 7:00 PM GMT)

கிருஷ்ணகிரியில் ஓய்வு பெற்ற மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மின்வாரிய அலுவலக மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் எதிரில் திட்ட கிளை தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளை தலைவர் சவுந்திரபாண்டியன் தலைமை தாங்கினார். துணை செயலாளர் நந்தியப்பன் வரவேற்றார். முன்னாள் மாவட்ட தலைவர் மோகன் தொடக்க உரையாற்றினார். செயலாளர் முனிரத்தினம், பொருளாளர் சந்திரன் ஆகியோர் கோரிக்கை விளக்கி பேசினர். மண்டல செயலாளர் கிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். கிளை இணை செயலாளர் வெங்கடாஜலம் நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தின் போது, மின்துறை பொதுத்துறையாகவே நீடிக்க வேண்டும். பவள விழா சலுகை 3 சதவீதம் வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிப்படி 70 வயது கடந்தவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story