ஓய்வு பெற்ற பணியாளர்கள் நலச்சங்க கூட்டம்


ஓய்வு பெற்ற பணியாளர்கள் நலச்சங்க கூட்டம்
x

ஓய்வு பெற்ற பணியாளர்கள் நலச்சங்க கூட்டம் நடந்தது.

பெரம்பலூர்

பெரம்பலூரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் பென்சனர் நலச்சங்க கூட்டம், கிளையின் நிர்வாகி கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. சங்க தலைவர் மருதமுத்து, பொதுச்செயலாளர் ஜெயச்சந்திரன், பொருளாளர் சூரியகுமார், ஓய்வுபெற்ற டிக்கெட் பரிசோதகர் மாணிக்கம், பச்சையப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், பணியின்போது இறந்த தொழிலாளர்களின் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடும் வகையில், கணவரை இழந்து ஓய்வூதியம் இல்லாமல் வாழ்பவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் உதவித்தொகை வழங்குவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து இறந்த விஜயகுமார், பார்த்திபன், செல்லதுரை, ராஜேந்திரன், நல்லத்தம்பி ஆகியோரது குடும்பத்தினருக்கு உதவிதொகை வழங்கப்பட்டது.


Next Story