ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்


ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்
x

முத்துப்பேட்டையில் ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்

முத்துப்பேட்டை;

முத்துப்பேட்டை பேரூராட்சி அருகே தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நேற்று மாலை நடைபெற்றது. போராட்டத்துக்கு வட்ட தலைவர் கோவி.ரெங்கசாமி தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை கோரிக்கை குறித்து விளக்கி பேசினார். போராட்டத்தில், ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர், அங்கன்வாடி ஊழியர், வருவாய் கிராம உதவியாளர், ஊராட்சி உதவியாளர்கள் உள்ளிட்ட அனைத்து ஓய்வூதியர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7,850 வழங்க வேண்டும், முதல்-அமைச்சரின் தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி மேலும் தாமதிக்காமல் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.


Next Story