தொப்பூர் அருகேஓய்வு பெற்ற தனியார் நிறுவன ஊழியர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை


தொப்பூர் அருகேஓய்வு பெற்ற தனியார் நிறுவன ஊழியர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை
x
தினத்தந்தி 9 Oct 2023 7:00 PM GMT (Updated: 9 Oct 2023 7:00 PM GMT)

தொப்பூர் அருகே ஓய்வு பெற்ற தனியார் நிறுவன ஊழியர் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தர்மபுரி

தொப்பூர் அருகே ஓய்வு பெற்ற தனியார் நிறுவன ஊழியர் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஓய்வு பெற்ற ஊழியர்

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே நேற்று 60 வயது மதிக்கத்தக்க நபர் உடல் சிதறிய நிலையில் ரெயில் தண்டவாளத்தில் இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் ஓசூரைச் சேர்ந்த மனோகரன் (வயது 63) என்பது தெரியவந்தது. அவர் இறந்து கிடந்த இடத்தின் அருகே ஒரு செல்போன் இருந்தது. அதற்குள் ஒரு கடிதம் வைக்கப்பட்டு இருந்தது.

அந்த கடிதத்தில் தனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என்று எழுதப்பட்டிருந்தது. தனியார் நிறுவன ஊழியராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற மனோகரன் சொந்தமாக தொழில் செய்ய விரும்பி குடும்பத்தினரிடம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அதன்பின் ஓசூரில் இருந்து இவருடைய சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டிக்கு சென்று அங்கு தனது தாயாருடன் கடந்த 6 மாதங்களாக வசித்து வந்துள்ளார்.

தற்கொலை

இந்த நிலையில் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்துடன் தொப்பூர் அருகே வந்த அவர் அந்த வழியாக வந்த ஒரு ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்திருப்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தர்மபுரி ரெயில்வே போலீசார், அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story