மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம்


மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம்
x

குறைதீர்ப்பு முகாமில் மக்களிடம் பெற்ற மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

நாகை சட்டமன்ற தொகுதியில் முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. குறை தீர்ப்பு முகாம்களை நடத்தி மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார். அந்த வகையில். திட்டச்சேரி பேரூராட்சிக்குட்பட்ட ப.கொந்தகை, இந்திராநகர், தாவூத் நாச்சியார் குடியிருப்பு, வெள்ளத்திடல், தைக்கால் தெரு, ஆண்டவர்நகர், தோப்பு தெரு ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.அந்த மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திட்டச்சேரி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் ஆயிஷா சித்திகா தலைமை தாங்கினார்.பேரூராட்சி இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். திட்டச்சேரி-நாகூர் சாலையில் மின்விளக்குகள் அமைக்க வேண்டும்.மரைக்கான்சாவடி சுடுக்காட்டிற்கு செல்ல பாலம் அமைக்க வேண்டும். திட்டச்சேரி பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்க வேண்டும். இடிக்கப்பட்ட சமுதாயக்கூடத்தை மீண்டும் கட்ட வேண்டும். இந்திராநகர் -தைக்கால் தெரு பகுதிகளில் சமுதாயக் கூடம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் எம்.எல்.ஏ வலியுறுத்தினார். கூட்டத்தில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் முகமது சுல்தான், செய்யது ரியாசுதீன், சுல்தான் ரித்தாவுதீன், பாத்திமா பர்வீன், பாக்கியவதி, கஸ்தூரி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story