ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பத்தில் திருத்தம் - அறிவிப்பு


ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பத்தில் திருத்தம் - அறிவிப்பு
x

ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய ஆகஸ்ட 2-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

2022-ம் ஆண்டுக்கான ஆசிரியர்தகுதித் தேர்வு தாள் 1, 2 தொடர்பான அறிவிப்பு, ஆசிரியர் தேர்வுவாரிய இணையதளம் வாயிலாக கடந்த மார்ச் 7-ம் தேதி வெளியிடப் பட்டது. ஆசிரியர் தகுதித் தேர்வுதாள் 1-க்கு 2,30,878 பேர், தாள்2-க்கு 4,01,886 பேர் என 6,32,764 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

விண்ணப்பதாரர்கள், தங்களது விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள பல்வேறு கோரிக்கை மனுக்களை ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்துக்கு அனுப்பி வருகின்றனர்.

விண்ணப்பத்தாரர்களின் கோரிக்கையை ஏற்று, ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பத்தில் இன்று 24-ந் தேதி முதல் ஆகஸ்ட் 2-ஆம் தேதி வரை திருத்தம் செய்ய, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாற்றம் செய்து விண்ணப்பத்தை சமர்பித்த பின் மேலும் மாற்றம் செய்யக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story